உள்ளூர் செய்திகள்

கல்பாக்கத்தில் மத்திய அரசை கண்டித்து அணுசக்திதுறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-30 11:00 GMT   |   Update On 2023-07-30 11:00 GMT
  • சங்க தலைவர் சகாதேவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.,
  • மனித உரிமை மீறல்களை ஐ நா சபை விசாரிக்க வேண்டும்.

மாமல்லபுரம்:

கல்பாக்கம் அம்பேத்கர் திடலில் கல்பாக்கம் அணுசக்திதுறை எஸ்.சி, எஸ்.டி ஊழியர் சங்கம் சார்பில், மணிப்பூர் வன்முறை சம்பவத்தை கண்டித்து, சங்க தலைவர் சகாதேவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூர் வன்முறைகளை கண்டும் காணாமல் இருக்கும் பா.ஜ.க மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கலவரத்தில் பெண்களை நிர்வானமாக்கி மானபங்க படுத்திய குற்றவாளிகள் மீது அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும், இந்த மனித உரிமை மீறல்களை ஐ நா சபை விசாரிக்க வேண்டும். என்றும் ஆர்ப்பாட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தனர்.

Tags:    

Similar News