உள்ளூர் செய்திகள் (District)

காஞ்சிபுரம் அருகே குட்கா விற்ற 2 பேர் கைது

Published On 2023-04-30 11:26 GMT   |   Update On 2023-04-30 11:26 GMT
  • போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் அங்கு உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
  • குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் பல்லலர் மேடு, சி.எஸ்.எம்.தோப்பு தெரு பிள்ளையார்பாளையம் போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சிவகாஞ்சீ போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் அங்கு உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையொட்டி, கோவிந்தம்மாள் (வயது 62), விசாலாட்சி (57) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News