உள்ளூர் செய்திகள் (District)

காஞ்சிபுரம் விநாயகர் கோயில் உண்டியல் உடைத்து திருட்டு

Published On 2023-03-29 22:45 GMT   |   Update On 2023-03-29 22:45 GMT
  • 3 சிறுவர்கள் கோயிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து சில்லரை காசுகள் ரூ.3664 -ஐ திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயற்சி செய்துள்ளனர்.
  • போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் கச்சபேஸ்வரர் நகரில் உள்ள அண்ணா தெருவில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிகாலை 3 சிறுவர்கள் கோயிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து சில்லரை காசுகள் ரூ.3664 -ஐ திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயற்சி செய்துள்ளனர்.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஒன்றுசேர்ந்து சிறுவர்களை கையும் களவுமாக பிடித்து, கோயில் பொறுப்பாளரான ஜோதிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜோதி சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சிறுவர்களை ஒப்படைத்துவிட்டு புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சிவகாஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News