உள்ளூர் செய்திகள் (District)

காரிமங்கலம் அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

Published On 2023-11-07 06:52 GMT   |   Update On 2023-11-07 06:52 GMT
  • கோவிலை பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடந்து உள்ளது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பெரிய பூலாம்பட்டி கிராமத்தில் பச்சையம்மன் கோவில் மற்றும் திம்மராய பெருமாள் கோவில் உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 23 ந் தேதி வழக்கம்போல் கோவில் பூஜையை முடித்து விட்டு கோவிலை அர்ச்சகர் பூட்டி விட்டு சென்றுள்ளார்.

மறுநாள் காலை அர்ச்சகர் சென்று பச்சையம்மன் கோவிலை பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடந்து உள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர் உள்ளே சென்று பார்த்தபோது 5 பவுன் தங்க நகை மற்றும் 2 பவுன் தாலி திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது .

அதேபோல் அதே பகுதியில் உள்ள திமிராய பெருமாள் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் உண்டியல் இருந்த நகை மற்றும் பணமத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர். கொள்ளை போன நகைகள் 9 பவுன் என தெரிகிறது. இது குறித்து கோவில் அர்ச்சகர் அளித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News