உள்ளூர் செய்திகள்

கொடநாடு கொள்ளை வழக்கு அடுத்த மாதம் 23-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2022-08-26 06:30 GMT   |   Update On 2022-08-26 06:30 GMT
  • கொடநாடு தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
  • கொடநாடு வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.

இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மறுவிசாரணை நடந்து வருகிறது.

இதுவரை சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி உள்பட 200-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

கொடநாடு தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று காலை கொடநாடு வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது சயான், வாளையார் மனோஜ், ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகியோர் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

Similar News