உள்ளூர் செய்திகள்

மல்லிகார்ஜூன கார்கேவை இன்று சந்திக்கிறார் கே.எஸ்.அழகிரி

Published On 2023-08-18 06:58 GMT   |   Update On 2023-08-18 06:58 GMT
  • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
  • கே.எஸ்.அழகிரியுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்எல்ஏக்களும் பெங்களூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சென்னை :

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி 4 ஆண்டுகளாக தலைவர் பொறுப்பில் இருக்கிறார். கே.எஸ். அழகிரியை மாற்ற வேண்டும் என்று கடந்த ஓர் ஆண்டாக மூத்த தலைவர்கள் மேலிடத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை கே.எஸ்.அழகிரி இன்று சந்திக்கிறார். பெங்களூருவில் இன்று மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

கே.எஸ்.அழகிரியுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்எல்ஏக்களும் பெங்களூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். கே.எஸ்.அழகிரியே மாநில தலைவராக நீடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News