உள்ளூர் செய்திகள் (District)
பள்ளி வளாகத்தில் புகுந்த பாம்பு பிடிபட்டது
- மறைமலைநகர் அரசு மேல்நிலை பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
- பள்ளி மாடிப்படியின் கீழ் பகுதியில் ஒரு பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.
மறைமலைநகர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அரசு மேல்நிலை பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளி வகுப்பறைக்கு செல்லும்போது திடீரென பள்ளி மாடிப்படியின் கீழ் பகுதியில் ஒரு பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதை பார்த்த மாணவர்கள் அலறியடித்து கொண்டு பள்ளி தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தனர். உடனே பள்ளி தலைமை ஆசிரியர் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மாடிப்படி கீழ் பகுதியில் மின்சார மீட்டர் அருகே மறைந்திருந்த 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.