உள்ளூர் செய்திகள்

முகப்பேரில் நடந்த அ.ம.மு.க. பிரமுகர் கொலையில் நெல்லை ரவுடிகள் 5 பேர் சிக்கினர்

Published On 2023-09-18 10:12 GMT   |   Update On 2023-09-18 10:12 GMT
  • பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.
  • நெல்லை, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ரவுடிகள் 5 பேரை தனிப்படை போலீசார் பிடித்து உள்ளனர்.

அம்பத்தூர்:

முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் ஜெகன்(45) என்பவர் கடந்த 5-ந்தேதி அதே பகுதியில் உள்ள அவரது மீன்கடை வாசலில் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.

ஏற்கனவே இந்த கொலை தொடர்பாக திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, கோவிலூர் பகுதியை சேர்ந்த மகேஷ் உள்பட 4 பேர் நொளம்பூர் போலீசில் சரண் அடைந்தனர். மேலும் வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான மந்திரமூர்த்தியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் அ.ம.மு.க.பிரமுகர் ஜெகன் கொலை தொடர்பாக நெல்லை, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ரவுடிகள் 5 பேரை தனிப்படை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News