உள்ளூர் செய்திகள் (District)

சரக்கு வேன் தாறுமாறாக ஓடி மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மீது மோதியது: பெண்கள் உள்பட 4 பேர் படுகாயம்

Published On 2023-01-03 07:15 GMT   |   Update On 2023-01-03 07:15 GMT
  • பொன்னேரியில் உள்ள கடைகளுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சரக்குவேன் சென்றது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய பூபதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த தச்சூர் கூட்டுரோடு பகுதியில் இருந்து பொன்னேரியில் உள்ள கடைகளுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சரக்குவேன் சென்றது. மீஞ்சூரைச் சேர்ந்த டிரைவர் மணிவண்ணன் வேனை ஓட்டினார்.

பொன்னேரி பஜாரில் அவர் வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார். அப்போது வண்டியில் பொருட்களை ஏற்றி இறக்கும் வேலை செய்து வந்த தச்சூர் கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்த பூபதி (22) என்பவர் வேனை ஓட்டினார்.

இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடீ எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஷேர் ஆட்டோ மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த கோடீஸ்வரன், லதா மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பொன்னேரியைச் சேர்ந்த மாரியம்மாள், ஆமூரைச் சேர்ந்த கலில், ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் படுகாயம் அடைந்த கோடீஸ்வரன், லதா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய பூபதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News