உள்ளூர் செய்திகள் (District)

மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்

Published On 2024-10-02 12:02 GMT   |   Update On 2024-10-02 12:02 GMT
  • மகாளய அமாவாசையில் இறந்து போன தங்கள் முன்னோர்கள் தங்கள் வீடுகளுக்கு வருவார்கள்.
  • விரதம் மேற்கொள்பவர்கள் ஆண்கள் மட்டுமே திதி கொடுக்க வேண்டும் என்பதும் ஐதீகம்.

திருச்செந்தூர்:

புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று ஏராளமானவர்கள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

மாதம்தோறும் அமாவாசை திதி வரும் அந்த திதிகளில் இறந்து போன தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதில் சிலர் தை மாதம் வரும் அமாவாசை, ஆடி மாத அமாவாசை நாட்களில் இறந்து போன தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

இந்த நாட்களில் வரும் அமாவாசைக்கு திதி கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை நாளில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அவ்வாறு செய்தால் ஒரு வருட அமாவாசையில் திதி கொடுத்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மகாளய அமாவாசையில் இறந்து போன தங்கள் முன்னோர்கள் தங்கள் வீடுகளுக்கு வருவார்கள். அவ்வாறு வரும் அவர்களை நினைத்து விரதம் மேற்கொண்டு கடல், ஆறு ஆகிய பகுதிகளில் நீராடி எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்தால் நம் வீட்டிற்கு வந்த மூதாதையர்கள் அகம் மகிழ்ந்து நம்மை வாழ்த்திப் செல்வார்கள் என்பது ஐதீகம்.

அதேபோல் விரதம் மேற்கொள்பவர்கள் ஆண்கள் மட்டுமே திதி கொடுக்க வேண்டும் என்பதும் ஐதீகம். 

Tags:    

Similar News