உள்ளூர் செய்திகள் (District)
பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.2¼ லட்சம் கொள்ளை
- பஸ் நிலையம் அருகில் உள்ள பேக்கரியில் பொருட்கள் வாங்க சென்றனர்.
- மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து மர்ம நபர்கள் ரூ.2¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த அண்ணாமலை சேரி குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார். இவர் மனைவி மாலினியுடன் சேர்ந்து பொன்னேரியில் உள்ளவங்கியில் ரூ.2லட்சத்து 25 ஆயிரம் பணம் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
பணத்தை மோட்டார் சைக்கிள் பெட்டில் வைத்து விட்டு அவர்கள் பொன்னேரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பேக்கரியில் பொருட்கள் வாங்க சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து மர்ம நபர்கள் ரூ.2¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.