உள்ளூர் செய்திகள் (District)

சுங்குவார்சத்திரம் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி மரணம்

Published On 2023-02-13 11:27 GMT   |   Update On 2023-02-13 11:27 GMT
  • வீட்டின் மைய பகுதியில் உள்ள சுவரை இடிக்கும் போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து விழுந்தது.
  • சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சுங்குவார்சத்திரம்:

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 48). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான வீட்டை இடித்து மறுசீரமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்தார். அப்போது வீட்டின் மைய பகுதியில் உள்ள சுவரை இடிக்கும் போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து விழுந்தது.

இதில் இடிபாடுகளில் சேகர் சிக்கினார். உடன் இருந்த சக தொழிலாளர்கள் சேகரை மீட்டு ஸ்ரீபெரும்புதுார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News