உள்ளூர் செய்திகள்
தரமணியில் விபத்தில் சிக்கி வாலிபர் பலி
- காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை வேளச்சேரி நேரு நகரைச் சேர்ந்தவர் கவுதம் (22). இவர் தரமணியில் 100 அடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நிலை தடுமாறி தடுப்புச் சுவரில் மோதினார். இதில் காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் அவரது உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.