உள்ளூர் செய்திகள் (District)
சொகுசு காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
- எர்ணாவூர் பகுதியில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
- காருடன் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவொற்றியூர்:
எர்ணாவூர் பகுதியில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 15 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து காரில் இருந்த திருவொற்றியூர் அம்பேத்கார் நகரை சேர்ந்த விக்னேஷ், எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தருண் கிருஷ்ணா,ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த செல்வராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். காருடன், கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.