உள்ளூர் செய்திகள் (District)
தக்காளி விலை உயர்வு.. தூக்கத்தை தொலைத்து விழித்திருக்கும் விவசாயிகள்
- தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் இரவு நேரங்களில் காவலில் ஈடுபட்டு உள்ளனர்.
- தக்காளிச் செடிகளில் பூச்சிகள் தாக்காமல் இருக்க, பூச்சிகளை கவரும் வகையில் மின் விளக்குகளையும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் இரவு நேரங்களில் காவலில் ஈடுபட்டு உள்ளனர்.
தக்காளி விலை உயர்வின் காரணமாக, அவற்றை மர்ம நபர்கள் திருடிவிடுவார்களோ என்ற அச்சத்தில் கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் சுழற்சி முறையில் காவல் காத்து வருகின்றனர்.
மேலும் தக்காளிச் செடிகளில் பூச்சிகள் தாக்காமல் இருக்க, பூச்சிகளை கவரும் வகையில் மின் விளக்குகளையும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.