உள்ளூர் செய்திகள் (District)

பாசனத்திற்கு தண்ணீர் திறப்பால் வைகை அணை நீர்மட்டம் சரிவு

Published On 2024-09-08 10:06 GMT   |   Update On 2024-09-08 10:06 GMT
  • முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.65 அடியாக உள்ளது. அணைக்கு 807 கன அடி நீர் வருகிறது.
  • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. 71 அடி உயரம் கொண்ட அணையில் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. மேலும் பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டதால் முழு கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில் மதுரை மாவட்ட பாசனத்திற்காக அணையில் இருந்து 900 கன அடிநீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் மழை ஓய்ந்ததால் அணைக்கு நீர்வரத்தும் 306 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 64 அடியில் இருந்து வேகமாக சரிந்து இன்று காலை 62.89 அடியாக குறைந்தது.

குடிநீருக்கான 69 கன அடி நீர் சேர்த்து 969 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4180 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.65 அடியாக உள்ளது. அணைக்கு 807 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 800 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 5083 கன அடி நீர் இருப்பு உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 124.15 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

Tags:    

Similar News