நண்பர் திருமணத்திற்கு சென்றபோது வேன் மோதி தொழிலாளி பலி
- கேசவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே இறந்து விட்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.
சங்ககிரி:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா இருகாலூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் கேசவன் (வயது 34).
இவர் சங்ககிரி குப்பனூர் பகுதியில் உள்ள தனியார் கியாஸ் குடோனில் லோடிங் மேனாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு கேசவன் தனது மோட்டார் சைக்கிளில் நண்பர் திருமணத்திற்கு செல்வதற்காக சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது வேலம்மா வலசு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் நூல் மில் வேன் மோதியது. இதில் கேசவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே இறந்து விட்டார்.
இந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவரான தேவூர் வட்ராம்பாளையத்தைச் சேர்ந்த பாலு (43) என்பவர் வேனை அதே இடத்தில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான வேன் டிரைவரை தேடி வருகின்றனர். பலியான கேசவனுக்கு செல்வராணி என்ற மனைவியும், சாய்கவுசிக் (6), வினிதா (3) என்ற குழந்தைகளும் உள்ளனர்.