உள்ளூர் செய்திகள் (District)

கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது

Published On 2023-05-07 08:47 GMT   |   Update On 2023-05-07 08:47 GMT
  • கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் வாடிக்கையாளர் போல்பேசி வரவழைத்து மடக்கி பிடித்தனர்.
  • பிஸ்வாஜித்தை போலீசார் கைது செய்து 8 கிலோ கஞ்சா, செல்போனை பறிமுதல் செய்தனர்.

போரூர்:

விருகம்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் வாடிக்கையாளர் போல்பேசி வரவழைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த பிஸ்வாஜித் (24) என்பதும், வடபழனி நூறடி சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்தபடி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பிஸ்வாஜித்தை போலீசார் கைது செய்து 8 கிலோ கஞ்சா, செல்போனை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News