உள்ளூர் செய்திகள்

அரூர் அருகே 30 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த வாலிபர் கைது

Published On 2023-10-26 09:52 GMT   |   Update On 2023-10-26 09:52 GMT
  • சாலையின் ஓரத்தில் நிறுத்தியிருந்த 30 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
  • புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அரூர்:

தருமபுரி மாவட்டம் அரூரில் மேல் பாட்சாபேட்டை, கீழ்பாட்சாபேட்டை, அசோகா பட்டறை முருகர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில், சாலையின் ஓரத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார், ஆட்டோ, ஈச்சர், பிக்கப் வேன் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளை மர்மநபர் உடைத்து சேதப்படுத்தினார்.

இதனால் இப்பகுதியில் உள்ள மக்களிடையே அச்சத்தை உருவாக்கியது. இந்நிலையில் அரூர் நகரம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்த புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து ஆய்வு செய்ததில், மர்மநபர் ஒருவர் நடமாட்டத்தை வைத்து அவர் யார் என்பதை அறிந்தனர். இதனை தொடர்ந்து அவரை வீட்டில் வைத்து போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர் அரூர் கே.கே நகர் சுடுகாடு மேடு பகுதியை சேர்ந்த ஸ்டாலின் என்பவருடைய மகன் வேலு என தெரியவந்தது.

இவர் நள்ளிரவு நேரத்தில் மது மற்றும் கஞ்சா போதையில் அந்த பகுதியில் சுற்றி திரிந்ததாகவும் சாலையின் ஓரத்தில் நிறுத்தியிருந்த 30 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து அவரை கைது தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். வாலிபர் ஒரு காரின் கண்ணாடியை உடைக்கும் சிசிடிவி காட்சி பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News