உள்ளூர் செய்திகள்

பிரதீப்

இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

Published On 2022-07-28 08:36 GMT   |   Update On 2022-07-28 08:36 GMT
  • இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
  • 17 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்தார்.

கடலூர்:

பண்ருட்டி அடுத்த பெரிய காட்டு பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் பிரதீப் (22). பட்ட தாரி வாலிபர். இவர் அதே பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்தார். அந்த பெண் 6 மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த பிரதீப் அவரை திருமணம் செய்ய மறுத்து விட்டார். இது குறித்து அந்த பெண் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வள்ளி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்தார். அவரை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி, கடலூர் கிளை சிறை யில் அடைத்தார்.

Tags:    

Similar News