- குடிப்பழக்கத்தை கண்டித்ததால் விபரீத முடிவு
- தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே பையர் நத்தம் கதிரிபுரத்தை சேர்ந்த வர் மணி. இவரது மகன் புகழேந்தி (வயது22). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.கூலி வேலைக்காக கடந்த 8 மாதங்க ளுக்கு முன்பு மயிலாடு துறைக்கு சென்ற புகழேந்தி அப்பகு தியை சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திரு மணம் செய்து கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளா கவே குடிப்பழக்கத்திற்கு அடிமையான புகழேந்தி திருமணத்திற்கு பிறகு திருந்தி வாழ வேண்டும் என குடும்பத்தினர் அடிக்கடி கண்டித்து வந்துள்ளனர். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி வேலைக்குச் சென்று விட்டு இரவு 10 மணிக்கு வீடு திரும்பி உள்ளார். அப்போது புகழேந்தி குடிபோதையில் இருந்துள்ளார்.இதனால் கோபம் கொண்ட இவரது தந்தை மணி, தாயார் ,மனைவி ஆர்த்தி ஆகியோர் அவரை கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த ்புகழேந்தி வீட்டின் அறைக்குச் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அவரது பெற்றோர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது புகழேந்தி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்து தந்தை மணி பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணமான சில மாதங்க ளிலேயே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்ப–வம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.