உள்ளூர் செய்திகள் (District)

விஷம் குடித்து வாலிபர் சாவு

Published On 2023-03-20 10:05 GMT   |   Update On 2023-03-20 10:05 GMT
  • டிப்ளமோ படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனைப் பெற்றோர் கண்டித்து உள்ளனர்.
  • கிருஷ்ணமூர்த்தி கடந்த 14 ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டு உள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள பனமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது23), இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இதனைப் பெற்றோர் கண்டித்து உள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த கிருஷ்ணமூர்த்தி கடந்த 14 ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டு உள்ளார்.

இதனை பார்த்த அவரது உறவினர்கள் தருமபுரி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இது குறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News