உள்ளூர் செய்திகள்

வாணியம்பாடி அருகே ஆந்திர தடுப்பணை நிரம்பி பாலாற்றில் நீர்வரத்து

Published On 2024-06-07 08:45 GMT   |   Update On 2024-06-07 08:46 GMT
  • வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில் மழை பெய்தது.
  • தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

ஆலங்காயம்:

தமிழக-ஆந்திர எல்லை பகுதியில் உள்ள குப்பம், மல்லானூர், பெரும்பள்ளம், தேவராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழக பகுதிகளான புல்லூர், திம்மாம்பேட்டை, நாராயணபுரம், ஜவ்வாது ராமசமுத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

கடந்த 3 நாட்களாக திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருவதால், பாலாற்றில் மீண்டும் நீர்வரத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆந்திர அரசு கட்டிய புல்லூர் தடுப்பணை அதன் கொள்ளளவு வரை நிரம்பி தற்போது தமிழக பாலாற்றில் தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த நீர் ஆவாரங்குப்பம், திம்மாம்பேட்டை, ராம நாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி பாலாற்றின் வழியாக வாணியம்பாடி நோக்கி வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

Tags:    

Similar News