உள்ளூர் செய்திகள்

கழுநீர்குளம் ஊராட்சிக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு

Published On 2023-05-12 08:35 GMT   |   Update On 2023-05-12 08:35 GMT
  • பணிகளை தேர்வு செய்வதற்காக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ் ஆய்வுப்பணி மேற்கொண்டார்.
  • கழுநீர்குளம் ஊராட்சி தலைவர் கை.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளம் ஊராட்சிக்கு திட்டப்பணிகளை மேற்கொள்ள மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ் ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான பணிகளை தேர்வு செய்வதற்காக அவர் ஆய்வுப்பணி மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் கழுநீர்குளம் ஊராட்சி தலைவர் கை. முருகன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முருகன், ராமர், தி.மு.க. நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் காமராஜ், செல்லபாண்டி, லிங்கம், வேல்முருகன், செல்வராஜ், தங்கராஜ், சிவசுப்பிரமணியன், ஜெகன், தங்கத்துரை, பொன்னுத்துரை, சிவபெருமாள், காசிபாண்டி, கைக்கொண்டான், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News