தீ விபத்தில் படுகாயமடைந்த ஊழியர் சாவு
- பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டு கடை முற்றிலுமாக தீப்பற்றி எரிந்தது.
- தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரவி பரிதாபமாக உயிரிழந்தார்.
கபிஸ்தலம்:
தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள சோழங்கர்நத்தம் கிராமத்தில் வசிப்பவர் சண்முகம்.
இவர் தனது வீட்டிற்கு பின்புறம் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.
இந்த பட்டாசு கடையில் இவரது உறவினர் ரவி (வயது 40) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி இந்த பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் பட்டாசு கடை தீப்பற்றி எரிந்தது. இதில், ரவி படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில் கும்பகோணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
சம்பவ இடத்தில் போலீஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக பட்டாசு கடை நடத்திய உரிமையாளர் பிரபாகரன் கைது செய்து செய்யப்பட்டார்.
படுகாயம் அடைந்த ரவி திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.