உள்ளூர் செய்திகள் (District)
கூலி தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
- தங்கை வீட்டிற்கு வந்திருந்த அவருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
- ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
திருச்சி,
திண்டுக்கல் மாவட்டம் வேம்பரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணையா. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 50) இவர் கூலி தொழிலாளி. சம்பவத்தன்று தங்கை வீட்டிற்கு வந்திருந்த அவருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு சிகிச்சை பெற்ற தமிழ்ச்செல்வி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.