உள்ளூர் செய்திகள் (District)

கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்தவர் கைது

Published On 2023-05-02 08:00 GMT   |   Update On 2023-05-02 08:00 GMT
  • போலீசார் காமராஜ் நகர் பகுதியில் ஒரு கடையில் சோதனை செய்தனர்.
  • கஞ்சா கலக்கப்பட்ட சாக்லேட்டுகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பட்டு அன்புக்கரசன் மற்றும் போலீசார் காமராஜ் நகர் பகுதியில் ஒரு கடையில் சோதனை செய்தனர்.

அங்கு கஞ்சா கலக்கப்பட்ட சாக்லேட்டுகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதை விற்றதாக ஓசூர் சின்ன எலசகிரி காமராஜ் நகரை சேர்ந்த ஜாஜாடிகிஷோர் பேகேரா (32) என்வெரை போலீசார் கைது செய்தனர்.

அவரது சொந்த ஊர் ஒடிசா மாநிலம் ஆகும். அவரிடம் இருந்து ரூ.1,400 மதிப்புள்ள 700 கிராம் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News