உள்ளூர் செய்திகள்

காணாமல் போன குழந்தையை 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

Published On 2023-01-12 10:24 GMT   |   Update On 2023-01-12 10:24 GMT
  • பணம் எடுத்துகொண்டு வெளியே வந்து பார்த்த போது சிறுமியை காணவில்லை .
  • கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கிருஷ்ணகிரி,

ஓசூர் அருகேயுள்ள மத்திகிரி குதிரைபாளையம் கிராமத்தை சேர்ந்த அன்பு வடிவு என்பவர் தனது 3 வயது குழந்தையான ரியாஸ்டி (எ)அக்சயா ஸ்ரீ உடன் மத்திகிரி பேருந்து நிலையம் அருகிலுள்ள ஏ.டி.எம்.முக்கு சென்று தன் மகளை வெளியே நிறுத்திவிட்டு பணம் எடுத்துகொண்டு வெளியே வந்து பார்த்த போது சிறுமியை காணவில்லை .

இதுகுறித்து அன்பு வடிவு மத்திகிரி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி மத்திகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்து அப்பகுதிகளிலுள்ள கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதன்மூலம் குகாணாமல் போன குழந்தையை 2 மணிநேரத்தில் குதிரைபாளையம் கிராமத்திற்கு அருகில் கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News