உள்ளூர் செய்திகள்
- புதிய பஸ் நிலையத்தில் முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார்.
- திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பலியானார்.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதுதொடர்பாக திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.