உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

உத்தமபாளையம் அருகே தவறி விழுந்த முதியவர் சாவு

Published On 2022-07-07 05:39 GMT   |   Update On 2022-07-07 05:39 GMT
  • கம்பம் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி முதியவர் கீழே விழுந்தார்.
  • சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உத்தமபாளையம்:

உத்தமபாளையம் அருகே கே.கே.பட்டியைச் சேர்ந்தவர் சுருளிமுத்து (வயது 77).

இவர் காமயகவுண்டன்பட்டி - கம்பம் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவரை கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சுருளி முத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News