உள்ளூர் செய்திகள் (District)

கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2023-09-22 06:30 GMT   |   Update On 2023-09-22 06:30 GMT
  • பெரம்பலூரில் கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது
  • கலெக்டர் கற்பகம் குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்

பெரம்பலூர் 

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரையை சேர்ந்தவர் பிச்சை மகன் செல்வராஜ் (எ) அப்துல் ரகுமான்(39). சினிமா டைரக்டரான இவர் கடநத் ஜூன் மாதம் 5ம் ததி மதுபாரில் மது அருந்திக்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து கொலை க்குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய சேலம் மாவட்டம், நெத்திமேடு காமராஜர் நகரை சேர்ந்த சேட்டு மகன் தட்சணாமூர்த்தி (30) யை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க எஸ்பி ஷ்யாம்ளாதேவி பரிந்துரையை ஏற்று கலெக்டர் கற்பகம் குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று தட்சணாமூர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News