உள்ளூர் செய்திகள்
- மோட்டார்சைக்கிளில் வந்த நபர் 100 கிராம் கஞ்சா வைத்து இருந்தார்.
- திருவண்ணாமலை யை சேர்ந்த பன்னீரை கைது செய்தனர்.
ஊத்தங்கரை,
ஊத்தங்கரை மது விலக்கு அமல் பிரிவு போலீசார் அத்திப்பாடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த நபரை சோதனை செய்தனர். அதில் அவர் 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கஞ்சா வைத்திருந்த திருவண்ணாமலை மாவட்ட் செங்கம் தாலுகா அயோத்திபட்டணத்தை சேர்ந்த பன்னீர் (53) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.