உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி

Published On 2022-06-13 09:43 GMT   |   Update On 2022-06-13 09:43 GMT
  • தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  • தடுப்பூசி சிறப்பு முகாமில் சுமாா் 11,000 பேருக்கு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகளுடன், பூஸ்டா் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஊட்டியில் வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ெகாரோனா நோய்த் தொற்று குறைந்திருந்த நிலையில், தற்போது நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது.மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 14 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட ெகாரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் சுமாா் 11,000 பேருக்கு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகளுடன், பூஸ்டா் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன.

இதில், ஊட்டியில் ரோஸ்மவுண்ட் பகுதியில் வீடு,வீடாகச் சென்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டன. இப்பணியை மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தாா்.இதேபோல் கோத்தகிரி, கீழ்கோத்தகிரி, சோலூர் மட்டம், அரவேணு, ஜக்கனாரை, தவிட்டு மேடு, கெனவுக்கரை, குஞ்சப்பனை, கட்டபெட்டு போன்ற முக்கியமான பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதுமட்டுமின்றி அனைத்து கிராமப்புறப் பகுதிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News