உள்ளூர் செய்திகள் (District)

விவசாயி வீட்டில் பணம், நகை திருட்டு

Published On 2023-03-03 09:19 GMT   |   Update On 2023-03-03 09:19 GMT
  • குடும்பத்துடன் அப்பகுதியில் நடந்த எருது விடும் விழாவை காண சென்றார்.
  • ரூ.1,10 ரொக்கப்பணம், 2 பவுன் தங்க நகை ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.

கிருஷ் ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகேயுள்ள முதுகுறுக்கி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரா (வயது 50). இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் நடந்த எருது விடும் விழாவை காண சென்றார்.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

வீட்டிற்குள் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.1,10 ரொக்கப்பணம், 2 பவுன் தங்க நகை ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு ராமச்சந்திராவுக்கு தெரிவித்தனர். அதன்பேரில் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News