உள்ளூர் செய்திகள்

வேதாரண்யம் அருகே பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.

வேதாரண்யம் அருகே பள்ளியில் முப்பெரும் விழா

Published On 2023-05-04 09:56 GMT   |   Update On 2023-05-04 09:56 GMT
  • மே தினவிழா, நிறுவனர் பிறந்தநாள் விழா, பணி நிறைவு செய்த ஆசிரியருக்கு பாராட்டு விழா.
  • தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மே தினவிழா, நிறுவனர் பிறந்தநாள் விழா, பணி நிறைவு செய்த ஆசிரியருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நீர்முளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

விழாவிற்கு வட்டார தலைவர் பாலகுமார் தலைமை தாங்கினார்.

முன்னதாக வட்டார செயலாளர் நெடுமாறன் வரவேற்றார்.

மாநில கூடுதல் தலைவர் திருமுருகன், மாவட்ட செயலாளர் அமிர்தலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகோபாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆரம்ப ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செ யலாளர் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணை ப்பாளர் தாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மாநில தலைவர் லட்சுமிபதி வாழ்த்துரை வழங்கினார்.

முடிவில் வட்டார பொருளாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

விழாவில் தமிழக ஆரம்ப ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News