உள்ளூர் செய்திகள்

பைக் விபத்தில் 2 பேர் படுகாயம்

Published On 2022-10-12 09:54 GMT   |   Update On 2022-10-12 09:54 GMT
  • சாலையின் குறுக்கே ஓடி வந்த மனநோயாளியால் விபரீதம்
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

ஆம்பூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் (வயது 52) நேற்று இரவு 9 மணிக்கு பணியை முடித்து விட்டு கத்தனேரிக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட 45 வயது ஆண் ஒருவர் ரோட்டில் குறுக்காக ஓடி வந்தார்.

அவர் மீது தங்கவேல் ஓட்டி வந்த பைக் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். தங்கவேல் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மனநிலை பாதிக்கப்பட்டவர் யார், எந்த ஊர், பெயர் தெரியவில்லை.

இவர் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News