உள்ளூர் செய்திகள் (District)
- வாலிபர் கைது
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த கம்பியை மட்டும் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் விவசாயி சில நாட்களுக்கு முன்பு இவரது பைக் திருடு போனது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
விசாரணையில் நாச்சார குப்பம் பகுதியைச் சேர்ந்த ரூபாதி (வயது 20 )என்பதும் இவர் பல்வேறு இடங்களில் வைத்து ஈடுபட்டதும் தெரியவந்தது.
பிரபாகரனின் பைக்கை திருடியதை ஒப்புக்கொண்டார்.
பின்னர் ரூபாதி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.