உள்ளூர் செய்திகள் (District)

வீட்டிற்குள் புகுந்த பாம்பு மீட்பு

Published On 2023-09-05 09:48 GMT   |   Update On 2023-09-05 09:52 GMT
  • தீயணைப்பு துறையினர் பிடித்தனர்
  • காப்பு காட்டில் விடப்பட்டது

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த குடியான குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 48).

நேற்று திடீரென இவரது வீட்டில் பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் வீட்டை விட்டு வெளியே ஓடினார். இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வீட்டின் அருகே இருந்த 3 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தனர்.

இதனை திருப்பத்தூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர் அவர்கள் பாம்பை அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு போய் விட்டனர்.

Tags:    

Similar News