உள்ளூர் செய்திகள் (District)

ஆம்பூரில் முருகர் திருக்கல்யாணம்

Published On 2023-11-20 09:43 GMT   |   Update On 2023-11-20 09:43 GMT
  • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
  • திருமண தடை நீங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கஸ்பா பகுதியில் உள்ள வீர விநாயகர் கோவிலில் முருகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சாமிக்கு புத்தாடை அணிவித்து, வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. இதில் திருமண தடை நீங்க சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News