உள்ளூர் செய்திகள் (District)

மாற்று கட்சியினர் ஓ.பி.எஸ். அணியில் இணைந்தனர்.

ஓ.பி.எஸ். அணி சார்பில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா

Published On 2023-10-30 09:45 GMT   |   Update On 2023-10-30 09:45 GMT
  • மாற்று கட்சியினர் 300 பேர் இணைந்தனர்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் ஓ.பி.எஸ். அணியின் சார்பில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் மாற்று கட்சியினர் 300-க்கும் மேற்பட்டோர் இணையும் விழா நகர செயலாளர் கோபிசங்கர் தலைமையில் நடைபெற்றது.

நகர அவைத்தலைவர் சஜாத் உசேன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கோ.சுரேஷ் பாபு கலந்து கொண்டு பேசினார்.

மேலும் நிகழ்ச்சி முடிவில் இ.பி.ஸ். அணி, பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சினர் சுமார் 300 பேர் தங்களை ஒ.பி.எஸ். அணியில் இணைத்துக் கொண்டனர்.

அவர்களை மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு சால்வைகள் அணிவித்து வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வன், நகர பொருளாளர் எம்.பிரகாஷ் ,நகர இணைச் செயலாளர் ராபியகவுஸ், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், சலீம், சரிதாபாஸ்கர், சிறுபான்மை பிரிவு நகர செயலாளர் ஆதில் அஹமத், அவைத்தலைவர் அத்தாவுள்ளா, துணை செயலாளர் நசீர் அகமது, இணைச் செயலாளர் நிஜாமுதீன், பொருளாளர் நஸ்ருல்லா, பாசரை நகர செயலாளர் பயாஸ் அகமத் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News