உள்ளூர் செய்திகள் (District)

அரசு பஸ் ஜப்தி

Published On 2023-10-31 09:55 GMT   |   Update On 2023-10-31 09:55 GMT
  • இழப்பீடு வழங்காததால் நடவடிக்கை
  • பஸ் மோதி 2 பேர் இறந்தனர்

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 60). இவரது மனைவி லதா(35). கடந்த 2014-ம் ஆண்டு நிம்மியம்பட்டில் பைக்கில் சென்ற போது, பஸ் மோதி 2 பேரும் இறந்தனர்.

இதைத்தொடர்ந்து மணியின் பிள்ளைகள் வாணியம்பாடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க போக்குவரத்து கழகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க வில்லை. அதைத்தொடர்ந்து பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இன்று வேலூரில் இருந்து சேலம் சென்ற அரசு பஸ் வாணியம்பாடியில் ஜப்தி செய்யப்பட்டது.

Tags:    

Similar News