உள்ளூர் செய்திகள் (District)

இறந்தவர் உடலை புதைக்க விடாததால் உறவினர்கள் போராட்டம்

Published On 2023-11-08 08:15 GMT   |   Update On 2023-11-08 08:15 GMT
  • போலீசார் பேச்சுவார்த்தை
  • உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி

ஆலங்காயம்:

வாணியம்பாடி அடுத்த ஏடிஎஸ் காலனியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் 40 வருடமாக சுடுகாடு இல்லாததால் இந்த பகுதியை சேர்ந்த யாரேனும் இறந்தால் அவர்களை புதைப்பதற்காக புதூர் பகுதியில் உள்ள மயானத்திற்கு எடுத்து சென்று அடக்கம் செய்வது வந்தனர்.

இந்த நிலையில் ஏடிஎஸ் காலனியை சேர்ந்த முருகன் (வயது 62). தொழிலாளி என்பவர் உடல்நல குறைவால் இறந்து விட்டார்.

அவரை புதைப்பதற்காக புதூரில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் இங்கு புதைக்க கூடாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஏடிஎஸ் காலனியை சேர்ந்த பகுதி மக்கள் மற்றும் இறந்தவரின் உறவினர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த் துறையினர் மற்றும் வாணியம்பாடி தாலுகா போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News