உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பல்லடம் அருகே பெண்ணிடம் 3 பவுன் நகை வழிப்பறி

Published On 2022-10-14 04:40 GMT   |   Update On 2022-10-14 04:40 GMT
  • கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
  • பல்லடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பல்லடம் :

பல்லடம் அருகேயுள்ள் கணபதிபாளையம் ஊராட்சி பெத்தாம்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் சுப்பிரமணி. இவரது மனைவி கல்யாணி(வயது 48). இவர் வீட்டின் அருகேயுள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் முகவரி கேட்பது போல் நடித்து கல்யாணியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இது குறித்து கல்யாணி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News