உள்ளூர் செய்திகள்

நாய்கள் கடித்ததால் இறந்த ஆட்டை படத்தில் காணலாம்.

பல்லடத்தில் நாய்கள் கடித்து 6 ஆடுகள் பலி

Published On 2023-03-01 11:12 GMT   |   Update On 2023-03-01 11:12 GMT
  • அர்ஜுனன் தனது விவசாய தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
  • காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் ஊராட்சி வலையபாளையத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன்(வயது 42). இவர், தனது விவசாய தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அங்கு வந்த நாய்கள் ஆடுகளை கடித்து குதறியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு வந்த அவரது குடும்பத்தினர். நாய்களை விரட்டியுள்ளனர். ஆனால் நாய்கள் கடித்ததால் பலத்த காயம் அடைந்திருந்த ஆடுகள் ஒவ்வொன்றாக இறந்தன.மொத்தம் 6 ஆடுகள் இறந்ததாக கூறப்படுகிறது.

இதன் மதிப்பு சுமார் ரூ.40 ஆயிரம். ஆடுகளை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அந்த பகுதியில் அடிக்கடி நடப்பதாகவும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News