உள்ளூர் செய்திகள்

தீப்பிடித்து எரிந்த கார். 

திருப்பூர் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

Published On 2023-04-27 11:14 GMT   |   Update On 2023-04-27 11:14 GMT
  • பழுது பார்ப்பதற்காக திருப்பூரில் உள்ள ஒர்க்ஷாப்பில் நிறுத்தி இருந்தார்.
  • அவிநாசிபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது.

 திருப்பூர் :

மதுரையை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 30). இவர் கார் ஒன்றை வாங்கி அதனை பழுது பார்ப்ப தற்காக திருப்பூரில் உள்ள ஒர்க் ஷாப்பில் நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு காரின் வேலை முடிந்து காரை எடுத்துக் கொண்டு மதுரைக்கு கொண்டு சென்றார்.

திருப்பூர் அடுத்த அவிநாசி பாளையம் அருகே சென்று கொண்டி ருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பி யது. இதனைப்பார்த்து சுதாரித்து கொண்ட தேவேந்திரன் உடனடியாக காரில் இருந்து இறங்கினார்.சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இருந்த போதிலும் கார் முழுவதும் எரிந்து நாசமானது.இது தொடர்பாக அவிநாசிபா ளையம் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News