உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் - 27-ந்தேதி நடக்கிறது

Published On 2023-09-24 06:56 GMT   |   Update On 2023-09-24 06:56 GMT
  • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 20- ல் நடைபெறுகிறது.
  • கூட்டமானது 27-ந்தேதி (புதன்கிழமை) அன்று மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.

திருப்பூர்,செப்.24-

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் வருகிற 27-ந்தேதி ( புதன்கிழமை) நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

திருப்பூா் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்காக குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 20- ல் வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.இதில் மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் மனுவாக வழங்கலாம்.

எனவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News