உள்ளூர் செய்திகள்
குண்டும் குழியுமான சாலையில் சிக்கிக்கொண்ட வாகனம்
- திடீரென பெய்த பலத்த மழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியது.
- சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று திடீரென பெய்த பலத்த மழையின் காரணமாக குண்டும், குழியுமான சாலைகளில் மழை நீர் தேங்கியது.இதில் வாகனங்கள் சிக்கிக் கொண்டன.குறிப்பாக ஊத்துக்குளி சாலை ரெயில்வே கேட் பகுதி மற்றும் அணைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகளில் வாகனங்கள் சிக்கி கொண்டன.
அந்த வாகனங்கள் அவ்வழியே வந்த சரக்கு வேன் மூலம் கயிறை கொண்டு பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ஊத்துக்குளி ரெயில்வே கேட், அணைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.