உள்ளூர் செய்திகள்

மனு கொடுக்க வந்த மல்லிகா குடும்பத்தினர். 

வீட்டை அபகரிக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை - கலெக்டரிடம் புகார்

Published On 2023-06-05 08:06 GMT   |   Update On 2023-06-05 08:06 GMT
  • மருத்துவ செலவுக்காக என்னிடம் அண்ணன் முருகேசன் பணம் கேட்டார் .
  • வீட்டை எனது பெயரில் அண்ணன் முருகேசன் கிரயம் செய்து கொடுத்துள்ளார்.

திருப்பூர் :

தாராபுரம் வேங்கிபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மல்லிகா (வயது 42) என்பவர் திருப்பூர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது அண்ணன் முருகேசன் பெருந்தொழுவில் வசித்து வருகிறார். அவரது மனைவி தங்கமணி.

இவர்களுக்கு குழந்தையில்லை. இந்நிலையில் தங்கமணிக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. அதற்கான மருத்துவ செலவுக்காக என்னிடம் அண்ணன் முருகேசன் பணம் கேட்டார் . நானும் கொடுத்தேன். இந்தநிலையில் நான் கொடுத்த பணம் போதவில்லை. அதனால் பெருந்தொழுவில் உள்ள வீட்டை முருகேசன் விற்க முடிவெடுத்தார். அது குறித்து நான் கேட்டபோது வீட்டை நீ வேண்டுமானால் வாங்கி கொள் என்று சொன்னார். அதன்படி அந்த வீட்டுக்கு ரூ. 14 லட்சத்தை கிரயத்தொகையாக வங்கியில் செலுத்தியுள்ளேன். அந்த வீட்டை எனது பெயரில் அண்ணன் முருகேசன் கிரயம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த வீட்டை தங்கமணி அபகரிக்க முயல்கிறார். எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனது வீட்டை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News