உள்ளூர் செய்திகள் (District)
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 700 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் - ஆலோசனை கூட்டத்தில் முடிவு
- மாவட்ட குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- 200 கோவில்களுக்கு மட்டும், விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.
திருப்பூர் :
இந்து அறநிலையத்துறை சார்பில், கோவில்களில் அறங்காவலர் நியமனம் தொடர்பாக, மாவட்ட குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாவட்ட அளவில் உள்ள கோவில்களுக்கு, தலா, ஐந்து பேர், மூன்று பேர் மற்றும் ஒருவர் வீதம், அறங்காவலர் நியமனம் நடக்க உள்ளது.இதுதொடர்பாக, மாவட்ட குழுவினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் மாவட்ட குழு தலைவர் சுப்பிரமணியம் கூறியதாவது:-
மாவட்ட அளவில், 700 கோவில்களுக்கு, அறங்காவலர் நியமனம் நடக்க உள்ளது.இதுவரை, 200 கோவில்களுக்கு மட்டும், விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. விரைவில், அறங்காவலர் குழு அமைப்பது தொடர்பாக ஆலோசித்து,வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.