உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

சாரண சாரணிய இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது

Published On 2022-09-20 08:23 GMT   |   Update On 2022-09-20 08:23 GMT
  • சிறப்பாக செயல்படும் பள்ளி முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
  • பெதப்பம்பட்டி ஆர்.ஜி.எம்., பள்ளி லட்சுமி, தாங்க்ஸ் பேட்ஜ் விருது பெற்றுள்ளனர்.

உடுமலை :

தமிழ்நாடு பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் நீண்ட நாள் சேவை செய்யும் ஆசிரியர்கள், சிறப்பாக செயல்படும் பள்ளி முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாரண ஆசிரியர் காளீஸ்வரராஜ் நீண்ட நாள் சாரண சேவைக்கான மாநில விருது பெற்றுள்ளார்.சிவசக்திகாலனி அரசு பள்ளித்தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியம், ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் பள்ளி முதல்வர் மாலா, கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்ட் பள்ளி முதல்வர் சாரதாமணிதேவி, பெதப்பம்பட்டி ஆர்.ஜி.எம்., பள்ளி லட்சுமி, தாங்க்ஸ் பேட்ஜ் விருது பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News